ஆதியிலே பூமி முழுமையாக ஜலத்தினால் மூடப்பட்டிருந்தது. பூமியை மூடிய ஜலம் அதிக உயரத்திற்கு இருந்திருக்கிறது. அதனால் தேவன் “ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும் அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்.” ஆதி 1 : 6, 7.
சமுத்திரம் மற்றும் சமுத்திரம் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு
ஆதியிலே பூமி முழுமையாக ஜலத்தினால் மூடப்பட்டிருந்தது. பூமியை மூடிய ஜலம் அதிக உயரத்திற்கு இருந்திருக்கிறது. அதனால் தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும் அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். ஆதி 1 : 6, 7. ஜலம் அதிக உயரமாக இருந்தபடியினால், தேவன் அதை இரண்டாக பிரித்து, இந்த பூமிக்கு தேவையான ஜலத்தை பூமியில் வைத்து விட்டு மற்ற அனைத்தையும் ஆகாய விரிவுக்கு மேலே வைத்தார். இதைத்தான் நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தின்போது திறந்தார்.;மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன என்று ஆதி 7 : 11- ல் சொல்லப்பட்டிருக்கிறது. அது எவ்வாறாக பெருகியதென்றல் மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்து முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று ஆதி 7 : 20 . அப்படியெனில் பூமியே தெரியாதபடிக்கு ஜலம் உயர்ந்து பூமியை மூடிற்று.
அப்படியானால், ஆகாய விரிவுக்கு கீழே உள்ள தண்ணீரை ஆதியிலே தேவன் என்ன செய்தாரென்றால், பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும் என்று ஆதி 1:9- ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த ஜலம் பூமியை மூடிக்கொண்டிருந்ததின் காரணத்தால் தான் தேவன் அதை ஓரிடத்தில் சேரக்கடவது என்று சொன்னார். அவ்வாரானபின்பு தேவன் வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார் ஆதி 1 : 9 அப்படியானால் வெட்டாந்தரை அதுவரை இல்லை. இதே காரியத்தை ஒரு அற்புதமாக மோசேயின் காலத்தில் தேவன் செய்ததை வேதத்தில் பார்க்கலாம்.;இஸ்ரவேலின் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்து போனார்கள். அவர்கள் வலது புறத்திலும், அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. யாத் 14 : 22, 29. பிதாவாகிய தேவனே சிருஷ்டிப்பின் தேவன் என்பதை இச்செயல் தெளிவாக அவரது பிள்ளைகளுக்கு காண்பிக்கிறது. அப்படியானால் ஜலமாகிய சமுத்திரமும் தேவனுடைய வார்த்தைக்கு படைப்பின்போது மட்டுமல்ல, கீழ்ப்படிகிறது.
அதே சமுத்திரமானது மனிதர்களால் மாசுபட்டு, நீந்தும் ஜீவஜந்துக்களும் ( ஆதி 1 : 20) மகா மச்சங்களும் சகல, நீர் வாழும் ஜந்துக்களும் ( ஆதி 1 : 21 ) வாழ திணரிக் கொண்டிருக்கின்றன. கொத்துக் கொத்தாக மீன்கள் சாகிறதையும், சிறு மீன்கள் மட்டுமல்ல பெறும் மீன்களான டால்பின்கள், திமிங்கலங்கள், சுறாக்கள் ஆகியவை கூட கரைகளில் உயிரின்றி கிடப்பதையும் சமீபகாலமாக நாம் செய்திகளில் கண்டிருக்கிறோம். இவ்வாறு நடப்பதற்குரிய காரணங்கள் என்ன என்பதை நாம் அறிவோம்.
(i) பிளாஸ்டிக் பொருட்களின் மாசு. கடலோரம் வாழும் மனிதர்களும் கடலை காண வரும் மனிதர்களும் கரைகளை மாசுப்படுத்துவது மட்டுமல்லாது, கடலிலும் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை கலக்கின்றன. இதனை ஊட்கொள்ளும் மீன்கள் மாண்டு போகின்றன.
(ii) வீடுகளிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றும் கழிவுகள் ஆறுகளின் மூலமாக சமுத்திரத்தில் கலப்பது, சமுத்திரத்தின் தண்ணீரை கருமையாக மாற்றியிருப்பதை நாம் சில இடங்களில் காணலாம்.
(iii) எண்ணை ஏற்றி செல்லும் கப்பல்களிலிருந்தும், எண்ணை கிடங்குகளிலிருந்தும், பைப்புகளிலிருக்கும் வெடிப்புகளிலிருந்தும் வெளியேரும் எண்ணை கசிவுகளை, மீன்கள் ஊட்கொள்ளும்போதோ அல்லது எண்ணை மிதக்கும் காரணத்தால் சுவாசத்திற்கு தேவையான காற்றை மீன்கள் சுவாசிக்க முடியாத நிலையிலோ அல்லது அந்த எண்ணை தீ பிடித்து எரியும் பட்சத்தில் வெப்பத்தின் காரணமாகவோ மீன்கள் பாதிக்கப்படுகின்றன.
(iv) இராணுவ கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என்று மட்டும் இன்றி அனைத்து ரக கப்பல்களிலும் முன்னேற்றம் என்ற பேரில் பொருத்தப்பட்டிருக்கிற சென்சார்ஸ், ரேடியோ ஆக்டிவ் கதிர்கள், கப்பலில் உள்ள பயணிகள் உபயோகிக்கும் தொலைபேசி கதிர்கள் பூமியை பாதிக்கின்றதுபோல சமுத்திரத்தில் வாழும் சகல நீர் வாழ் ஜந்துக்களையும் பாதிக்கின்றன.
(v) தேவன் எல்லாவற்றையும் பலுகி பெருக சொன்னார் தேவன் அவைகளை(சமுத்திரத்தின் உயிர் வாழ் ஜீவஜந்துக்களை) ஆசீர்வதித்து, நீங்கள் பலுகி பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்று சொன்னார். ஆதி 1: 22. அதேப்போல், மீன்களுடைய பெருக்கத்திற்கு தேவையான இனம் பெருக்கம் காலத்தில், அவைகளை பெரும்பாலான மீனவர்கள் பிடிப்பதில்லை. ஆனால் சிலர், பெருக்கத்திற்கு தேவையான காலத்தை கொடுக்காமல். பணத்திற்காகவும், அதிலும் அதிக லாபத்திற்காகவும் இனபெருக்க காலத்திலேயும் மீன்களைப் பிடித்து விற்க்கின்றன. இது இயற்கைக்கு எதிரான ஒரு செயல். ஆகையால் மீன்கள் பெருகாமல் குறைகின்றன ஆனால் அது பலரை பாதிக்கின்றது என்பது தான் உண்மை.
இந்த காரணங்களுக்கெல்லாம் காரணம் மனிதனின் அளவற்ற ஆசையும் செயல்பாடும் தான். இயற்கை ஒன்றிணைந்திருக்கிறது. தேவனுக்கு கீழ்ப்படிந்திருக்கிறது. தேவனின் படைப்போ மனிதனுக்கு நன்மைக்கேதுவாகவே தான் ஆதி முதல் இருக்கின்றது. (எ.கா.) எல்லா மீன் இனங்களும் மனிதனுக்கு மருந்தாகவும் போஷாக்கான உணவாகவும் இருக்கின்றன. ஆனால் இவ்வாறான செல்வத்தை மனிதன் கெடுத்து தனக்கு தானே தீங்கை வரவழைத்துக்கொள்கிறான் என்பதுதான் பரிதபிக்கக்கூடிய உண்மை.
வெளிப்படுத்தின விசேஷம் 11 : 18- ல் பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கு காலம் வந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் மாற்றங்களை தாக்குபிடிக்கமுடியாமல் இயற்கையும்; ஏற்படுத்தும் எல்லாவற்றையும் தெரிந்த தேவனின் கோபமும் சேர்ந்து, சமுத்திரத்தில் புயல்களாகவும், வெள்ளப்பெருக்காகவும், சுனாமிகளாகவும் உருவாகுகின்றன. ஆகையால் மனிதனே விழித்தெழும்பு, சமுத்திரத்தை மாசுப்படுத்தாதே. சகல நீர் வாழும் ஜந்துக்களையும் நமக்காகவும், நம் பிற்கால சந்ததிக்காகவும் பாதுகாக்க வேண்டாமா!!!
விழித்தெழும்புங்கள் ! எல்லா வித இயற்கை வளங்களையும் பாதுகாப்போம் வாருங்கள் !!!
Write a public review