சந்தோஷம்!
"பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லா வித சந்தோஷத்தினாலும் மாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோமர் 15:13).
வேதாகமத்தில் பலவிதமான சந்தோஷங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தோஷத்திற்கு எளிமையான விளக்கம் கொடுப்பது கடினமாகும்.
துன்மார்க்கர் கூட நீதிமான் மீது வெற்றிபெற்றதற்காக சந்தோஷப்படுகிறார்கள்.
சந்தோஷத்தில் பல நிலைகள் உள்ளன. அதில் தேவனுடைய பிள்ளைகளின் சந்தோஷம் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். நீதிமானுடைய சந்தோஷம் தேவனுடைய ஆவியினால் வருகிறது (பிலி 4:4; கலா 5:22)இது போன்ற சந்தோஷம் நமது தற்கால ஜீவனுக்காக உண்டாகாமல் நமது வருங்கால ரட்சிப்புக்காக உண்டாகிறது (ரோம 5:2; 8.18; 1பேது 1:461.
தற்காலிக சந்தோஷத்தைவிட இந்த சந்தோஷம் மேன்மையானது. ஏன்?
இந்த சந்தோஷம் ஆவியின் கனியாகும். சூழ்நிலைகளினால் இந்த சந்தோஷம் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்த சந்தோஷத்தின் பண்பு மாறாமல் இருக்கும். அதாவது, நல்ல சூழ்நிலையிலும், தீய சூழ்நிலையிலும், இந்த சந்தோஷத்தின் பண்பு மாற்றமடையாமல் அப்படியே இருக்கும். ஏனெனில் இதன் அஸ்திபாரமாக இருப்பவர் தேவன்.ஆவிக்குரிய சந்தோஷம் மிகவும் கஷ்டமான காரியங்களையும் தாங்க உதவும். ஏனெனில் இந்தக் கனி பரிசுத்த ஆவியானவரால் விசுவாசிக்குள் வளப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயருக்கு நிருபம் எழுதியபொழுது, இதைப் புரிந்து வைத்திருந்தார். நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக் கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களானீர்கள் (1தெசலோனிக்கேயர் 1.5)
இந்த உலகம் கொடுக்கக்கூடிய சந்தோஷத்தைவிட ஆவியின் கனியான சந்தோஷம் மிகவும் மேன்மையானது. இந்த உலகத்தில் நாம் ஒருசில காரியங்களைக்குறித்து சந்தோஷமடையலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை. கடினமான சூழ்நிலையில் உலக சந்தோஷம் ஒரு மனிதனை முழுமையாக தேற்ற முடியாது. ஆயினும் ஒருவரிடத்தில் ஆவியானவருடைய சந்தோஷம் வரும்பொழுது மட்டுமே, அவர் முழுமையான சந்தோஷத்தை அனுபவிப்பார். உலகத்தில் கிடைக்கிற சந்தோஷம் என்பது வேறு, ஆவியானவருடைய சந்தோஷம் என்பது வேறு. நாம் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதன் விளைவினால் ஆவியின் சந்தோஷம் வருகிறது.
மெய்யான கிறிஸ்துவின் சமாதானத்தை பெறுவோம். அதற்கு கிறிஸ்துவில் நாம் நிலைத்திருப்போம் ஆமென்.
Write a public review