கழுதை
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



கழுதை

மனுஷர் ஒருகாலும் ஏறியிராத ஒரு கழுதைக் குட்டி கட்டியிருக்க காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.  ( மாற்கு 11 : 2 )  

கழுதை ஒரு அற்ப பிராணி. துணிகளை சுமந்து செல்வது. அதை யாராகிலும் யுத்தத்திற்கு அழைத்துச் செல்வார்களா? அது பார்பதற்கு அழகாக இருக்காது. அதற்கு குதிரைபோல் கம்பீரத் தோற்றம் கிடையாது.கழுதை தாழ்மையையும் குறிக்கிறது. 

தேவனுக்கு வேண்டியது  கழுதைதான். ஒரு வேளை நாம் மற்றவர்களால் அற்பமாய் எண்ணப்படுகிற நபராக இருக்கலாம். மற்றவர்கள் நம்மை பார்க்கும் பொழுது உயர்வாக எண்ணக்கூடிய காரியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சோர்ந்து போகாதீர்கள். இயேசுவுக்கு அப்படிப்பட்ட நபர்தான் தேவை. ஆனால் ஒரு காரியம். அது அவிழ்க்கப்பட்ட கழுதையாக இருக்கவேண்டும். கட்டப்பட்ட கழுதையால்ல . ஒருவன் இன்னும் பாவக்கட்டினால் கட்டப்பட்டிருந்தால் , இயேசுவுக்குப் பிரயோஜனமற்றவன். விடுவிக்கப்பட்ட கழுதையா? பாவத்திலிருந்து விடுதலை உண்டா? அப்படியானால்  இயேசுவுக்கு வேண்டும்.  

ஆண்டவராகிய இயேசு அந்த கழுதையின் மேல் பிரயாணம் செய்தபொழுது அந்த கழுதைக்கு கிடைத்த மேன்மையைப் பாருங்கள். கிறிஸ்து இயேசு நம்முடைய வாழ்விலே  பிரயாணம் செய்யும் பொழுது, நம்முடைய வாழ்வு கிறிஸ்துவால் உயர்த்தப்படுகிறது. ஆமென். 





  :   21 Likes

  :   75 Views