சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம் (சங் 20:7)
இந்த உலகத்தில் மனிதர்கள் அழகைக்குறித்து, படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, வீட்டைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஜாதியைக் குறித்து என்று கணக்கிலடங்காத அநேகமாயிரமான காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு மெய் கிறிஸ்தவன் இவைகளைக்குறித்து மேன்மைபாராட்டமாட்டான். நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். அப்படியென்றால் என்ன? அவருடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து அவர் தம்முடைய மக்களுக்கு எவ்விதம் நல்லவராக இருக்கிறார், நம்பிக்கையின் தேவனாக இருக்கிறார் என்று அவரையே உயர்த்தி மேன்மைபாராட்டுவார்கள்.
நானோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக பவுலின் அறிக்கையை, ஜெபத்தைப் பாருங்கள்.
நம்மை தேவன் இரட்சித்திருக்கிறார், என்ற உறுதி இருக்குமானால், நாம் கர்த்தரை குறித்து மட்டும்தான் மேன்மை பாராட்ட முடியும். ஆமென்.
Write a public review