எரே : 33 : 3 நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் நமக்கு அறியாததும் , எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு செய்பவராக இருக்கிறார். அன்று மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டபோது கடல் இரண்டாகப் பிரிக்க செய்தார். அவ்வளவு வல்லமை உள்ள ஆண்டவர் . அன்று மோசேயோடு கூட இருந்த தேவன் இன்று நம்மோடு கூட இருக்கிறார். விசுவாசித்து அவரைக் கூப்பிடுவோம் கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்வார்.
எப்படி கூப்பிட வேண்டும் :
உண்மையாக
சங் : 145 : 18 உண்மையாக நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் பொழுது கர்த்தர் சமீபமாக இருந்து நம்முடைய விண்ணப்பத்தை கேட்டு நம்முடைய விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கிற ஆண்டவராக இருக்கிறார்.
சத்தமிட்டு
சங் : 142 : 1 சத்தமிட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் பொழுது அவர் நமது சஞ்சலத்தை மாற்றி நமது நெருக்கங்கலில் இருந்து விடுவிக்கிறார்.
இரவும் பகலும்
லூக் : 18 : 7 இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் விஷயத்தில் அவர் நியாயம் செய்யாமல் இருப்பாரோ என்று வேத வசனம் நமக்கு சொல்கிறது . அவரை நோக்கி நாம் கூப்பிடும் போது நிச்சயமாக நமக்கு அவர் நியாயம் செய்பவராக இருக்கிறார்
மனம் சலிக்காமல்
ஏசாயா : 43:22 கர்த்தரிடம் நாம் மனம் சலிக்காமல் ,சோர்ந்து போகாமல் நாம் ஜெபம் செய்யும் பொழுது நமது விண்ணப்பத்தை கேட்டு அவர் நிச்சயமாக பதிலளிப்பார்.
நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நமக்கு துணையாக இருந்து விடுவிக்கிறவராக இருக்கிறார். ஆமென்.
Write a public review