கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்

 எரே : 33 : 3 நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது அவர் நமக்கு அறியாததும் , எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு செய்பவராக இருக்கிறார். அன்று மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டபோது கடல் இரண்டாகப் பிரிக்க செய்தார். அவ்வளவு வல்லமை உள்ள ஆண்டவர் . அன்று மோசேயோடு கூட இருந்த தேவன் இன்று நம்மோடு கூட இருக்கிறார். விசுவாசித்து அவரைக் கூப்பிடுவோம் கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்வார். 

எப்படி கூப்பிட வேண்டும் :

   உண்மையாக   

   சங் : 145 : 18 உண்மையாக நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் பொழுது கர்த்தர் சமீபமாக இருந்து நம்முடைய விண்ணப்பத்தை கேட்டு நம்முடைய விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கிற ஆண்டவராக இருக்கிறார். 

   சத்தமிட்டு 

   சங் : 142 : 1 சத்தமிட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் பொழுது அவர் நமது சஞ்சலத்தை மாற்றி நமது நெருக்கங்கலில் இருந்து விடுவிக்கிறார். 

   இரவும் பகலும் 

   லூக் : 18 : 7 இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் விஷயத்தில் அவர் நியாயம் செய்யாமல் இருப்பாரோ என்று வேத வசனம் நமக்கு சொல்கிறது . அவரை நோக்கி நாம் கூப்பிடும் போது நிச்சயமாக நமக்கு அவர் நியாயம் செய்பவராக இருக்கிறார் 

  மனம் சலிக்காமல் 

   ஏசாயா : 43:22 கர்த்தரிடம் நாம் மனம் சலிக்காமல் ,சோர்ந்து போகாமல் நாம் ஜெபம் செய்யும் பொழுது நமது விண்ணப்பத்தை கேட்டு அவர் நிச்சயமாக பதிலளிப்பார். 

  நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நமக்கு துணையாக இருந்து விடுவிக்கிறவராக இருக்கிறார். ஆமென். 

  




  :   26 Likes

  :   77 Views