கர்த்தருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சம் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாமிசமாக மாறி ஜனங்களுக்கு மெய்யான ஒளியை கொடுத்தது, இரட்சண்ணியத்தை கொடுத்தது
கர்த்தருடைய வார்த்தை , பாதைக்கு வெளிச்சம்
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாமிசமாக மாறி ஜனங்களுக்கு மெய்யான ஒளியை கொடுத்தது, இரட்சண்ணியத்தை கொடுத்தது.
கர்த்தருடைய வார்த்தை ஜீவனும், வல்லமையும் உள்ளது. ( எபிரெயர் 4: 12) .
கர்த்தருடைய வார்த்தை மனிதனுக்குள் வரும்போது தீபமாக மாறுகிறது (மனிதனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம் நீதி 20: 27 ).
மனிதனுக்குள் எப்படி செயல்படுகிறது?
தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்கும் ( யோபு 27 : 2 ). ஆதி மனிதனுக்கு தேவன் ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். கர்த்தருடைய வார்த்தைக்கு ஜீவன் உண்டு, அந்த ஜீவனுள்ள வார்த்தை மனிதனில் நாசி வழியாக வாயிலிருந்து வரும்போது வல்லமையாக வெளிப்படுகிறது. அதுபோல் மனிதனுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கும் பொழுது தேவ வார்த்தை உள்ளத்திற்குள் சென்று இருதயம் ஒளியால் நிரம்பி வழிகிறது.
கர்த்தருடைய வார்த்தை ஜனங்களை மீட்டு, பரிசுத்த படுத்தி, நித்திய வாழ்வை பெற்று கொள்ள செய்கிறது.
பூவின் மேல் சூரியன் பட்டவுடன் மலர்ந்து பயன்படுவது போல, தேவ வசனம் நமக்குள் வரும்போது நாம் பிரகாசிக்கிறோம்.
கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்வில் எப்படி செயல்படுகிறது. ?
1) வழிகாட்டி - சங்கீதம் 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
இருள் சூழ்ந்த, வீழ்ச்சியடைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ( பயம், திகில், தோல்வி, நம்பிக்கையின்மை, மனகுழப்பம், பொறாமை, துன்மார்க்க செயல்) இப்படிப்பட்ட சூழலில் கர்த்தருடைய வசனத்தை தனக்குள்ளாக வைத்து வெளிச்சத்தில் வாழலாம்.
வார்த்தையோடு வாழ்க்கை இருக்கும் போது வாழ்க்கை செழிப்பாகும். வார்த்தையை விட்டு விலகும்போது இருள் வருகிறது (மல்கியா 2 : 6-9)
வார்த்தை வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு வழிகாட்டுகிறது.
ஆபத்துகளில் வழிநடத்துகிறது.
நமது பலவீனங்களில் வழிநடத்துகிறது, உம்முடைய வசனம் மனமகிழ்ச்சி, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே பெலன்.
ஆத்துமாவில் இருக்கும் உன் தோல்விகளில் வழிநடத்துகிறது.
நீதியின் பாதைகளில் வழி நடத்துகின்றது.
சமாதான பாதையில் நடத்துகிறார்.
விசுவாசத்திலும் ( ரோமர் 10 : 17), பரிசுத்தத்திலும் ( சங் 119:9)
பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் (119:130).
(2). வார்த்தை, தேவ சித்தத்தை செய்து முடிக்கிறது.
ஏசாயா 55:10, 11
நம்முடைய ஆசீர்வாதம், விடுதலை, தேவ கிருபை, சமாதானம், தெய்வபக்தி அனைத்தும் அவருடைய வார்த்தையில் உள்ளது.
கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை வைத்து ஜெபிக்கும் போது அது நமது வாழ்வில் வெறுமனே திரும்பாது.
ஏசாயா 40 : 8 - வார்த்தை நிலைத்து நிற்கும்.
மத்தேயு 24:35 - வானமும், பூமியும் ஒழிந்து போகலாம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
(3) எதிரியை ஜெயம் கொள்வதற்கு
எபேசியர் 6:17
தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்து கொள்ளுங்கள்.
தீய மற்றும் ஆவிக்குரிய போராட்டத்தில் எதிர்த்து வெற்றி பெற தேவையான அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்குள் உள்ளது, அவரை விசுவாசிப்பதின் மூலம் பூமிக்குரிய முட்களை முறியடிக்க முடியும். வேதத்தில் ஒவ்வொரு பகுதியும் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது ஏனெனில் அவர் ஜீவனுள்ள வார்த்தை ( எபிரேயர் 4 : 12).
நாம் கர்த்தருக்குள் நிலைத்து இருந்து, அவருடைய வார்த்தை நமக்குள் இருந்து ( யோவான் 15 :7) ஆவியின் பட்டயத்தை பயன்படுத்தும் போது வெற்றி பெறுகிறோம்.
இயேசுகிறிஸ்து வனாந்திரத்தில் சாத்தானை வசனத்தை கொண்டு ஜெயித்தார் ( மத்தேயு 4:1 -11) தேவன் கொடுத்த எல்லா கவசங்களையும் எடுத்து வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்தை பிடித்து ஜெயிக்க வேண்டும்.
சாத்தானை ஆவியின் பட்டயம் கொண்டு எதிர்ப்பது ?
என் வாழ்வில் இல்லை என்று சொல்ல மாட்டேன் "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் "( பிலிப்பியர் 4 : 19).
இனி என்னால் முடியாது என்று சொல்ல மாட்டேன் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு "( பிலிப்பியர் 4:13) .
பயமாய் இருக்கிறது என்று சொல்ல மாட்டேன் "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும் தெளிந்த புத்தியும் உள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத்தேயு 1:7 ).
எனக்கு பெலன் இல்லை என்று சொல்ல மாட்டேன். "கர்த்தரே என் ஜீவனின் பெலனானவர்" ( சங் 27:1).
என் வாழ்வில் சாத்தான் அதை செய்து விட்டான் இதை செய்து விட்டான் என்று சொல்ல மாட்டேன். "ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4).
தோல்வி பற்றி பேச மாட்டேன். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்க பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரிந்தியர் 2:14).
ஞானமில்லை என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் கிறிஸ்து இயேசுவே தேவனால் எனக்கு ஞானமானார் (1 கொரிந்தியர் 1:31).
வியாதியை குறித்து அவிவிசுவாசமாக பேச மாட்டேன். " அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்" ( ஏசாயா 53:5).
கவலைகளை, விரக்தியை அறிக்கை செய்ய மாட்டேன். "அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால் என் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுகிறேன் " (1 பேதுரு 5: 7).
எதையும் விடவே முடியவில்லை என்று சொல்ல மாட்டேன். "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு" ( 2 கொரிந்தியர் 3:17).
கர்த்தருடைய வசனம் நம் வாழ்வில். வெளிப் படுத்துகிறது
குழப்பங்களும் பதிலை வெளிப்படுத்துகிறது. பேசுகிறது - தேவையான நேரங்களில் நம்மிடம் பேசுகிறது.
சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிய பண்ணுகிறது. தீர்ப்பு வழங்குகிறது.
கற்றுக் கொடுக்கிறது. உபதேசம் கொடுக்கின்றன.
சாட்சியாக வைக்கிறது - வசனத்தை கைகொண்டால் உலகத்திற்கு சாட்சியாய் இருக்கலாம்.
நோயிலிருந்து விடுதலை.
கர்த்தரை அறிகிற அறிவு.
கிறிஸ்து என்கிற எண்ணெய் (oil) நமக்குள் இருக்கிறவரை நாம் வெளிச்சம் கொடுப்போம்.
ஒரு கலங்கரை விளக்காக நாம் இருப்போம். எச்சரிப்பையும், ஆசீர்வாதத்தையும் குறித்து கிறிஸ்துவை கொண்டு வழிகாட்டுபவர்களாக மாறுவோம். ஆமென்
Write a public review