நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது, என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (சங் 86:13)
ஆண்டவரே என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். இந்த இடத்தில் தாழ்ந்த பாதாளம் என்று சொல்லப்படும் போது, நரகத்தை நோக்கி போகிற தேவனையறியாத வாழ்க்கையைக் குறிக்கிறது. மேலும் அது படுபாதாளமான நரகத்தைக் குறிக்கிறது. பாவமும், பாவ வாழ்க்கையும் ஒரு பாதாளம் போன்றது தான். அதிலிருந்து மேலே எழும்பி வருவது என்பது தேவனுடைய மகத்துவமான கிருபையே ஒழிய வேறொன்றுமில்லை.
சங்கீதக்காரன், தேவன் தனக்கு பாராட்டின கிருபை பெரியது என்று நினவுகூறுகிறார். கிருபை என்று சொல்லப்படும் பொழுது தகுதியற்ற ஒருவனுக்கு கிறிஸ்துவின் மூலம் தேவன் காண்பிக்கும் தயவு, இரக்கம், அன்பு. தேவன் தம்முடைய கிருபையால் நம்மைத் தப்புவிக்கிறார். அந்த கிருபையின் மூலம் இவ்விதமான பாதாளத்திலிருந்து மீட்பை பெற்றிருக்கிறோம். தாவீது இதை மிகுந்த நன்றியுள்ள உணர்வோடு வெளிப்படுத்துகிறார். இந்த கிருபை அற்பமானதல்ல, பெரியது, மகத்துவமானது, மேன்மையானது என்று சொல்லுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் இவ்விதம் தேவன் அன்புகூர்ந்து காண்பித்த மிகப்பெரிய கிருபையைக் குறித்து தியானித்து மேன்மை பாராட்டுகிறோமா? ஆமென்.
Write a public review