கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

ஏசாயா 55:6.  "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." 

இன்று அவரைக் கண்டடையத்தக்க தூரத்தில் உள்ளோம். கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நமக்கு இது மிகப்பெரிய பாக்கியம் .எங்கே ஒன்று அல்லது இரண்டு பேர் என் நாமத்தினிமித்தம் கூடி இருக்கிறீர்களோ அங்கே நான் வாசம் செய்கிறேன் என்றார். இன்று அவரை பெறக்கூடிய ஒரு வாழ்வில் இருந்து கொண்டிருக்கிறோம். 

பழைய ஏற்பாட்டில் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இன்று அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் சமீபமாயிருக்கிறார். சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு  இந்த பாக்கியம் கிடைக்காது. காலத்தைப் பயன்படுத்தி கொள்வோம், எச்சரிக்கையாய் இருப்போம். நமது வாழ்வில் என்னதான் கஷ்டங்கள் , பெலவீனங்கள், துன்பங்கள் இருந்தாலும் கர்த்தரை பெற்றிருக்கிற ஒரு கால கட்டத்தில் உள்ளோம்.உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். உண்மையில் நாம் ஒரு நல்ல காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கர்த்தரை பெற்றிருக்கிற காலம் இது. அதை நினைத்து நாம் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருப்போம். ஆமென்.  





  :   22 Likes

  :   89 Views