"உலகில் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறதை பார்க்க முடியாது. எல்லோருக்கும் எதோ ஒரு வேதனை, துக்கம் வாழ்வில் வருவது இயல்பு. ஆனால் வேத வசனம் சொல்லுகிறது கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்று . இது சாத்தியமா என்ற கேள்வி நமக்குள் வரும். இது சாத்தியமான ஒன்று ஏனென்றால் வேத வசனம் சொல்கிறது"
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியா; 4:4 "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
உலகில் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறதை பார்க்க முடியாது. எல்லோருக்கும் எதோ ஒரு வேதனை, துக்கம் வாழ்வில் வருவது இயல்பு. ஆனால் வேத வசனம் சொல்லுகிறது கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்று . இது சாத்தியமா என்ற கேள்வி நமக்குள் வரும். இது சாத்தியமான ஒன்று ஏனென்றால் வேத வசனம் சொல்கிறது.
கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது கிறிஸ்தவ கடமையில் ஒரு முக்கிய அங்கமாகும்; எனவே ஒரு மனிதனால் எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை இந்த வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஒருவேளை இப்படிப்பட்ட சந்தோஷம் நம் வாழ்வில் இல்லை என்றால் ,நாம் கர்த்தரோடு உள்ள ஐக்கியத்தில் குறையோடு இருக்கிறோம் என்பதை உணர்ந்து , கர்த்தரை கிட்டி சேருவோம். இயேசு கிறிஸ்துவுடனான நெருக்கமான ஒற்றுமை உண்மையான மகிழ்ச்சியின் அடித்தளம்.
இந்த மகிழ்ச்சி தொடர்ச்சியாக இருக்கக்கூடியது . இதை நாம் உணர்ந்து, கர்த்தரை விசுவாசித்து ,நாம் எப்பொழுதும் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாக இருப்போம். ஆமென்.
Write a public review