உன் சிருஷ்டிகரை நினை
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



உன் சிருஷ்டிகரை நினை

பிரசங்கி 12:1 "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை".

நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகளை கூட நினைத்து சில பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்களிடம் ஒழுக்கமும் நற்பண்புகளும் இல்லாததினால் தான். அப்படியானால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது பிள்ளைகளின் கல்வியோ, அல்லது அவர்களின் அந்தஸ்தோ அல்ல. நற்பண்புகளும் நல்ல நடத்தைகளும் தான் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

இன்று அநேகருடைய அறிவு ஆலமரத்தைப் போலிருக்கிறது. ஆனால் பண்புகளில் ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள். வாலிபர்களே! உங்கள் பெற்றோரையும், உங்களோடு வாழ போகிறவரையும் சந்தோஷப்படுத்துவது உங்கள் கல்வியோ, செல்வமோ அல்ல. உங்களின் பண்புகளும் நல்ல நடத்தைகளும் இருந்தால் தான் நீங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியும். 

இவைகளைப் பெற்றுக்கொள்ள சாலமோன் ராஜா சொல்கிறார், உன் வாலிப நாட்களிலே உன்னுடைய சிருஷ்டிகரை நினை. இப்படிப்பட்ட நற்பண்புகளையும் நல் விருப்பங்களையும் தேவன் தான் ஒரு மனிதனுக்கு கொடுக்க முடியும் . தேவ உறவைத் தேடி, நல்ல பண்புகளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வோம். ஆமென். 





  :   24 Likes

  :   56 Views