மத்தேயு 7:4. "இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?"
நாம் அநேக நேரம் நம்மை உத்தமமாகவும் நீதிமான்களில் நீதிமான்களாகவும் நினைப்பது அதிகமாக காணப்படுகிறது. ஆனால் தன்னைத் தான் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் குறைவு.
எப்பொழுதும் நாம் ஒரு குறையை ஒருவரிடம் காணும் பொழுது, உடனடியாக முதலாவது நம்மை நாம் சோதித்தறிந்து, நம்மிடத்தில் துரும்பு இருக்கிறதா? அல்லது பெரும் உத்திரம் இருக்கிறதா? என்று நாம் நம்மை நாமே சோதித்து பார்ப்பது நலமானது. அது நம்மை தேவனுடைய பிரியமான பிள்ளைகளாகவும் இன்னும் பரிசுத்தமாகவும் மாற்ற உதவும்.
சங்கீதக்காரன் சொல்லும் பொழுது என் இருதயத்தை சோதித்து பாரும் என்று சொல்லுகிறார். தேவன் நம்மை சோதித்து நம்மைப்பற்றி சொல்லுவாரானால், என்ன சொல்லுவார்?
நம்முடைய குறைகளையும் குற்றங்களையும் தினந்தோறும் ஆராய்ந்து, அகற்றி, நம்மை தேவனுடைய வருகைக்கு தயார் செய்வோமா?
Write a public review