"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." (1 பேதுரு 1:15-16)
ஒரு இளைஞனாக, உங்கள் மதிப்புகளை சமரசம் செய்ய பல சோதனைகளையும் அழுத்தங்களையும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் தூய்மையையும் பரிசுத்தத்தையும் நாடுங்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து, கடவுளை மதிக்கும் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.
உலகத்திலே மற்றவர்களை நாம் பார்க்கும் பொழுது பரிசுத்தமாக வாழ முடியாது. உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்பலாம் பரிசுத்தமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்? ஆம் பரிசுத்தரை நோக்கி பார்க்கிற பொழுது நாம் பரிசுத்தராக வாழ முடியும். எனவே நம் ஆண்டவர் நமக்கு சொல்லுகிறார் நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று கூறுகிறார்.
பரிசுத்தமாக வாழ்வதில் குறைவிருந்தால் கவலைப்படாதீர்கள். ஐயோ நான் பரிசுத்தமாக வாழ முடியாது என்ற எதிர் சிந்தனை உங்களுக்கு இன்றைக்கு வேண்டாம்.
நீங்கள் பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்க்கிற பொழுது, விண்ணப்பம் செய்கிற பொழுது, அவரைப்போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற பொழுது ஆண்டவர் நிச்சயமாக அதை அறிந்து நம்முடைய வாழ்க்கையிலே அதை நிறைவேற்றுவார் நீங்கள் பரிசுத்தராக ஒவ்வொருவரும் வாழ முடியும் ஆமென்.
Write a public review