2 இராஜாக்கள் 7:9 "பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்".
குஷ்டரோகிகளான நாலு பேர் பசியின் காரணமாக பட்டணத்திற்குள் செல்ல பிரயாசப்பட்டார்கள். ஏற்கனவே எலிசாவின் தீர்க்கதரிசனத்தின் படி ஆண்டவர் சீரியாவின் படைகளை அங்கிருந்து துரத்தி விட்டார். அந்தக் குஷ்டரோகிகள் பாளையத்திற்குள் வந்த பொழுது அவர்களுக்கு வெள்ளி, பொன் , புசிக்க தேவையான ஆகாரம் எல்லாம் கூடாரத்தில் கிடைத்தது.
அந்த சூழலில் அவர்களுக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது. நாம் மட்டும் இந்த நன்மையை அனுபவிக்க கூடாது. நாம் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டது. இந்த நாளில் நாம் மௌனமாக இருக்கக் கூடாது அது குற்றம், என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். பின் அந்த நற்செய்தியை அறிவிக்க போவோம் வாருங்கள் என்று கூறி அவர்கள் அந்த நற்செய்தியை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவித்தார்கள்.
அதேபோல் இன்று நாமும் தேவனுடைய வார்த்தையை புசித்து ருசித்த ஒவ்வொருவரும் அந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க முன்வர வேண்டும். அநேகர் கர்த்தருடைய வார்த்தையை ருசிக்க முடியாத ஒரு ஆத்தும பசியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
நற்செய்தி அறிவிப்போம் வாருங்கள்!!!
Write a public review