நம்
வாழ்க்கையில் ஒரு காரியத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இருந்தால்
ஒரு சுடு நீரில் முட்டையையும் உருளைக்கிழங்கையும் போட்டால். கடினமாக இருந்த உருளைக்கிழங்கு
மெதுவாக மாறுகிறது. இலகுவாக தண்ணீர் போன்று இருந்த முட்டை கடினமாக மாறுகிறது. அப்படி
என்றால் நாம் சூழலை குறை சொல்லக்கூடாது. ஒரே சூழலில் இரண்டு விதமான காரியங்கள் நடக்கிறது.
இன்றைக்கு நாம் நம்முடைய காரியத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் நம்முடைய வாழ்க்கையை
நாம் எப்படி எடுத்துச் செல்ல போகிறோம் என்பதுதான் முக்கியம். லகுவாக எடுக்கிறோமா? கடினமாக
எடுக்கிறோமா? இரண்டுமே சாத்தியம். எது நமக்கு தேவையோ அங்குதான் நமது வெற்றியும், தோல்வியும்
இருக்கிறது. நாம் வெற்றியை நோக்கி நமது பார்வை இருக்குமானால் அந்த சூழல் ஒன்றும் இல்லாமல்
போய்விடும்.
"உறவுகளிலே
தோல்வி"
“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேதுரு 5:7).
“சமாதானத்தை
உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம்
கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும்
பயப்படாமலும் இருப்பதாக