கிறிஸ்துமஸ் என்பது விளக்குகள், பரிசுகள் மற்றும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல. அதன் மையத்தில், கிறிஸ்துமஸ் என்பது இழந்ததும் கண்டெடுக்கப்பட்டதும் பற்றிய ஒரு சத்தியம். அது இழந்ததைத் தேடி வந்த ஒரு தேவனைப் பற்றியது.
தேவதூதன் மேய்ப்பர்களிடம் அறிவித்தார்:
“பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்கா 2:10). அது ஏன் ஒரு சிறந்த நற்செய்தியாக இருந்தது? ஏனென்றால், விலைமதிப்பற்ற ஒன்று தொலைந்துபோயிருந்தது இப்போது, கிறிஸ்துவுக்குள் அது கண்டெடுக்கப்பட்டது.
1. மனிதம் தொலைந்து போயிருந்தது:
“நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பி அலைந்தோம்” (ஏசாயா 53:6) வேதாகமம் கூறுகிறது.
மக்கள்:
2. தேவன் தேடி வந்தார்:
கிறிஸ்துமஸ் நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறது, நாம் அவரைக் கண்டுபிடிப்பதற்காக தேவன் காத்திருக்கவில்லை, அவர் நம்மைக் கண்டுபிடிக்க வந்தார். எசேக்கியேல் 34:11-16 இல், ஆண்டவர் தனது தொலைந்து போன ஆடுகளை (இஸ்ரேல்) தனிப்பட்ட முறையில் தேடி, மீட்பதாகவும், மீட்டெடுப்பதாகவும் உறுதியளிக்கிறார், இது ஆண்டவரின் தேடல் மற்றும் மறுசீரமைப்பின் கருப்பொருளை விளக்குகிறது, இந்த கருத்தை இயேசு, பின்னர் தனிநபர்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தினார்.
லூக்கா 15-ஆம்
அதிகாரத்தில் காணாமல் போனவர்களைத் தேடுதல்:
காணாமல் போன ஆடு (லூக்கா 15:3-7): ஒரு மேய்ப்பன் 99 ஆடுகளை விட்டுச் சென்று, காணாமல் போன ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவதைப் பற்றி இயேசு கூறுகிறார், மனந்திரும்பும் ஒரு பாவியைப் பற்றி பரலோகம் மகிழ்ச்சியடைவதை விளக்குகிறார்.
தொலைந்து போன நாணயம் (லூக்கா 15:8-10): ஒரு பெண் பத்து நாணயங்களில் ஒரு நாணயத்தைத் தேடி, அது கிடைத்தவுடன், நண்பர்களுடன் கொண்டாடுகிறாள், தொலைந்து போன ஒருவரைக் கண்டுபிடிப்பதில் இயேசுவின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறார்.
கெட்ட குமாரன் (லூக்கா 15:11-32): தந்தை தனது தொலைந்து போன மகனை இருகரம் நீட்டி வரவேற்கிறார், மனந்திரும்புபவர்களுக்கு இயேசுவின் நிபந்தனையற்ற அன்பையும் மன்னிப்பையும் காட்டுகிறார்.
இயேசுவின் பணி (லூக்கா 19:10): “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார்” (லூக்கா 19:10). கிறிஸ்துமஸ் என்பது தொலைந்துபோன இருதயங்களைத் தேடுவதற்காக மனித வரலாற்றில் தேவன் அடியெடுத்து வைப்பதாகும். இயேசு தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்கக் காத்திருக்காமல், தீவிரமாகத் தேடுகிறார். ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவுக்கு ஒரு ஆடு அல்லது ஒரு நாணயம் போல விலைமதிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
.3. தொலைந்து போனவர்கள் கண்டெடுக்கப்பட்டனர்:
எலியா போன்றவர்கள் பயம் காரணமாக மறைந்துவிட்டனர் (1 இராஜாக்கள் 19) தேவன் எலியாவை தேடி சென்று அவரை ஊக்கப்படுத்தினார். மேய்ப்பர்கள் அறியாமையில் தொலைந்து போயிருந்தனர். தேவன் அவர்களைக் கண்டெடுத்தார். ஞானிகள் தேடிக்கொண்டிருந்தனர் தேவன் அவர்களுக்கு வழிகாட்டினார். உலகம் தொலைந்து போயிருந்தது தேவன் தம் குமாரனை அனுப்பினார்.
இயேசு என்ற பெயரின் அர்த்தம்:
“அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” (மத்தேயு 1:21) சிலுவையில், இயேசு விலைக்கிரயத்தைச் செலுத்தினார். உயிர்த்தெழுதலில், அவர் வெற்றியை அறிவித்தார். தொலைந்து போனது இப்போது கண்டெடுக்கப்பட்டது.
ஏன் ஆண்டவர் தொலைந்து போனதை தேடுகிறார்?
ஏனென்றால், தொலைந்து போனது விலையேறப்பெற்ற ஆத்துமா, மேலும் அவர் மனிதனை தம்முடைய சாயலாக படைத்தார் என்று வேதம் கூறுகிறது. படைத்தவருக்கு தான் தெரியும் அந்த ஆத்துமாவின் விலை எவ்வளவு முக்கியமானதென்று. அதற்காக தான் ஆண்டவர், இங்கே ஒரு ஆட்டை தேடி செல்கிறார். நாம் கூட சாதாரணமான பொருள் தொலைந்தால் அதைத் தேட மாட்டோம். ஆனால், அதுவே பணமோ அல்லது தங்கமோ தொலைந்து விட்டால், எவ்வளவு சிரமம் எடுத்து அதைத் தேடுகிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நீங்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், அவர் உங்களைக் கண்டறிய முயற்சி செய்கிறார், அவரது குரலைக் கவனிக்க அவர் உங்களுக்கு சிறுசிறு வாய்ப்புகள் கொடுக்கிறார்.
4. மீட்பின் பெரும் மகிழ்ச்சி:
லூக்கா 15 ஆம் அதிகாரத்தில் ஒரு பாவி மனந்திரும்புவதைக் குறித்து பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை வலியுறுத்துகிறது. தொலைந்து போனதைக் கண்டுபிடிப்பது பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கிறிஸ்துமஸ் இந்த பரலோக மற்றும் பூலோக மகிழ்ச்சிக்கான ஆரம்பக் காரணமாகும் இது இரட்சகரின் வருகையின் கொண்டாட்டமாகும், இது லூக்கா 15-இல் விவரிக்கப்பட்டுள்ள மனந்திரும்புதலையும் மன்னிப்பையும் சாத்தியமாக்குகிறது.
இரட்சிப்பில் மகிழ்ச்சி: இந்தப் பிறப்பு தேவதூதர்களால் அறிவிக்கப்படுகிறது, இது "எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியைக் கொண்டுவருகிறது” (லூக்கா 2:10). தேவதூதர்களின் "பெரும் மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தி" என்ற செய்தி, தொலைந்து போனதைக் கண்டுபிடிப்பதன் மூலம் வரும் மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும். இந்த அதிகாரத்தின் மூன்று உவமைகள், மூன்று உவமைகளும் சந்தோஷத்தை குறித்து இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சந்தோஷம் காணாமல் போன ஆடு, வழி தவறி போன மனிதன், காணாமல் போன பணம் இவற்றை கண்டுபிடிக்கிற பொழுது உண்டாகிற பரலோக சந்தோஷத்தை கூறுகிறது. பரலோகம் சந்தோஷப்படுகிறபொழுது அந்த சந்தோஷம் நிறைவாக நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதுதான் உண்மையான சந்தோஷம். தம்மைப் பின்பற்றுபவர்களிடையே தம்முடைய மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்ற இயேசுவின் விருப்பத்தை யோவான் 15:11 பதிவு செய்கிறது.
முடிவுரை:
சுருக்கமாக, கிறிஸ்துமஸ் என்பது தேடுபவரின் வருகை, கிறிஸ்துமஸ் என்பது பின்வரும் நிகழ்வுகளைக் கொண்டாடும் ஒரு பண்டிகை:
இந்த கிறிஸ்துமஸில், தங்கக் கிரீடம் அணிந்த ஒரு ராஜாவைத் தேடாதீர்கள். தொலைந்துபோனதை கண்டெடுக்கும் இடத்தில் இருப்பவரைத் தேடுங்கள். நீங்கள் அவரைக் கண்டடையும்போது, உங்கள் சொந்த வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டடைகிறீர்கள். இந்தக் கிறிஸ்துமஸில் நாம் மகிழ்வோம், இயேசு பிறந்ததற்காகவும், நாம் கண்டெடுக்கப்பட்டதற்காகவும். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:11) ஆமென்.